கோவை: கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக கோவை குற்றாலத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக கோவை குற்றாலத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மழையுடன் சூறைக்காற்று வீசி வருவதால் குற்றாலம் செல்லும் பாதையில் அவ்வப்போது மரங்கள் விழுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும், கனமழை காரணமாக அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த காரணங்களால் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் குற்றாலம் மூடப்பட்டது. இந்த சூழலில், கோவை குற்றாலம் ஒன்பதாவது நாளாக இன்றும் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவை குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மழையுடன் சூறைக்காற்று வீசி வருவதால் குற்றாலம் செல்லும் பாதையில் அவ்வப்போது மரங்கள் விழுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும், கனமழை காரணமாக அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த காரணங்களால் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் குற்றாலம் மூடப்பட்டது. இந்த சூழலில், கோவை குற்றாலம் ஒன்பதாவது நாளாக இன்றும் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.