கோவை: சிறுவாணிக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக அப்பகுதியில் தற்காலிகமாக மாற்றுப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
கோவை: சிறுவாணிக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக அப்பகுதியில் தற்காலிகமாக மாற்றுப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
சாடிவயல் சிறுவாணி சாலையிலிருந்து சிறுவாணி அணைக்கு செல்ல சுமார் 15 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இந்த சிறுவாணி அணைக்கு செல்ல 22 கொண்டை ஊசி வளைவுகளை தாண்டிதான் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், இந்த அணைக்கு செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் 16-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், சாலையே துண்டிக்கப்பட்டது. மேலும், சிறுவாணி அணையின் நீர் அளவைத் தெரிந்துகொள்ளும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று சிறுவாணிக்கு செல்லும் வழிக்கு செல்ல தற்காலிக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து அடர்ந்த வனப்பகுதியின் வழியாக இந்தப் பாதை செல்கிறது.
சாடிவயல் சிறுவாணி சாலையிலிருந்து சிறுவாணி அணைக்கு செல்ல சுமார் 15 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இந்த சிறுவாணி அணைக்கு செல்ல 22 கொண்டை ஊசி வளைவுகளை தாண்டிதான் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், இந்த அணைக்கு செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் 16-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், சாலையே துண்டிக்கப்பட்டது. மேலும், சிறுவாணி அணையின் நீர் அளவைத் தெரிந்துகொள்ளும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று சிறுவாணிக்கு செல்லும் வழிக்கு செல்ல தற்காலிக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து அடர்ந்த வனப்பகுதியின் வழியாக இந்தப் பாதை செல்கிறது.