கோவை: 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டியை மத்திய கயிறு வாரியத்துறை அமைச்சர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் இன்று தொடங்கி வைத்தார்.
கோவை: 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டியை மத்திய கயிறு வாரியத்துறை அமைச்சர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை உள்பட நாடு முழுவதும் உள்ள 10 இடங்களில் நடக்கும் இந்தப் போட்டிகள் 5 நாட்கள் நடைபெறுகிறது. கோவையில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய கயிறு வாரியத்துறை அமைச்சர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், "சிறிய கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் தொழில்நுட்ப உதவியுடன் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளினால் உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற மத்திய அரசுகளின் தேசிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு அருமையான அடித்தளமாகும்," என்றார்.

'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 1,00,000 பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்திற்கு ரூ.75,000-ம், 3-வது இடத்திற்கு ரூ. 50,000-ம் வழங்கப்படும். வெற்றி பெறும் அணிக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.


கோவை உள்பட நாடு முழுவதும் உள்ள 10 இடங்களில் நடக்கும் இந்தப் போட்டிகள் 5 நாட்கள் நடைபெறுகிறது. கோவையில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய கயிறு வாரியத்துறை அமைச்சர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், "சிறிய கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் தொழில்நுட்ப உதவியுடன் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளினால் உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற மத்திய அரசுகளின் தேசிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு அருமையான அடித்தளமாகும்," என்றார்.

'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 1,00,000 பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்திற்கு ரூ.75,000-ம், 3-வது இடத்திற்கு ரூ. 50,000-ம் வழங்கப்படும். வெற்றி பெறும் அணிக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
