கோவை: கோவை அருகே பங்கஜாமில்லில் இருந்து பஞ்சுகள் வெளியேறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், குடியிருப்புகளுக்குள் பரவிக் கிடந்த பஞ்சுகள் அப்புறப்படுத்தப்பட்டன.
கோவை: கோவை அருகே பங்கஜாமில்லில் இருந்து பஞ்சுகள் வெளியேறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், குடியிருப்புகளுக்குள் பரவிக் கிடந்த பஞ்சுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

புலியகுளம் அருகே உள்ள பங்கஜாமில் பல வருடங்களாக இயங்கி வருகிறது. தேசிய பஞ்சாலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்த பஞ்சாலையில், 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பஞ்சாலையில் இருந்து வெளியேறிய பஞ்சுகள் பெரியார் நகர் பகுதி குடியிருப்புகளுக்குள் பரவியது. சாலையெங்கும் பனி போல படர்ந்திருந்த பஞ்சுகள், வீடுகள், மரங்கள் உள்ளிட்டவற்றிலும் படிந்தன.

மேலும், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் பஞ்சு படர்ந்ததோடு, உணவு பொருட்கள், தண்ணீர் உள்ளிட்டவற்றிலும் கலந்ததால் உடல் நலக்குறைவு ஏற்படுமென பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்தச் செய்தி நேற்று ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், இன்று காலை முதல் பெரியார் நகரில் படர்ந்திருந்த பஞ்சுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் பஞ்சாலை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பங்கஜாமில் அதிகாரிகள் கூறியதாவது:- மில்லில் இருந்து கழிவு பஞ்சுகள் எதுவும் வெளியேறவில்லை. நுண்ணிய பஞ்சு துகள்களை பிரித்தெடுக்கும் வலை கிழிந்ததால், நல்ல பஞ்சு வெளியேறியது. கிழிந்த வலை உடனடியாக சரி செய்யப்பட்டு பஞ்சு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனை ஏற்படாமல் இருக்க வலையில் பில்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


புலியகுளம் அருகே உள்ள பங்கஜாமில் பல வருடங்களாக இயங்கி வருகிறது. தேசிய பஞ்சாலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்த பஞ்சாலையில், 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பஞ்சாலையில் இருந்து வெளியேறிய பஞ்சுகள் பெரியார் நகர் பகுதி குடியிருப்புகளுக்குள் பரவியது. சாலையெங்கும் பனி போல படர்ந்திருந்த பஞ்சுகள், வீடுகள், மரங்கள் உள்ளிட்டவற்றிலும் படிந்தன.

மேலும், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் பஞ்சு படர்ந்ததோடு, உணவு பொருட்கள், தண்ணீர் உள்ளிட்டவற்றிலும் கலந்ததால் உடல் நலக்குறைவு ஏற்படுமென பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்தச் செய்தி நேற்று ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், இன்று காலை முதல் பெரியார் நகரில் படர்ந்திருந்த பஞ்சுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் பஞ்சாலை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பங்கஜாமில் அதிகாரிகள் கூறியதாவது:- மில்லில் இருந்து கழிவு பஞ்சுகள் எதுவும் வெளியேறவில்லை. நுண்ணிய பஞ்சு துகள்களை பிரித்தெடுக்கும் வலை கிழிந்ததால், நல்ல பஞ்சு வெளியேறியது. கிழிந்த வலை உடனடியாக சரி செய்யப்பட்டு பஞ்சு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனை ஏற்படாமல் இருக்க வலையில் பில்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
