கோவை: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்களின் கூட்டு முயற்சியால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளலூர் தொட்டிக்கு நொய்யல் ஆற்றுநீர் சென்றடைந்தது.
கோவை: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்களின் கூட்டு முயற்சியால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளலூர் குளத்திற்கு நொய்யல் ஆற்றுநீர் சென்றடைந்தது.
கடந்த சில நாட்களாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால், மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள், அணைகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சிறுவாணி அணையில் நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நொய்யல் ஆறு மற்றும் அதன் நீர்பிடிப்புப் பகுதிகள் அதிகளவு நீர்வரத்தைப் பெற்றுள்ளன.

நொய்யல் ஆற்றில் இருந்து வெளியேறும் நீர், ராஜவாய்க்கால், சேத்துமா உள்ளிட்ட வாய்க்கால்களின் மூலமாக வெள்ளலூர் குளத்தை வந்தடைகிறது. மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சிறுதுளி உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து ராஜவாய்க்காலில் இருந்த சுமார் 1,600 ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும், கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளலூர் குளத்திற்கு நீர் பாய்ந்து செல்லும் பகுதிகளை தூர்வாரி, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதன் பலனாக, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளலூர் குளத்திற்கு நொய்யல் ஆற்றின் நீர் சென்றடைந்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

"தற்போது வரை தூர்வாரும் பணி முழுவதும் நிறைவடையவில்லை. நீர்செல்லும் வழித்தடங்களான வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி செல்வதற்கான சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மழையினால் மட்டுமே வெள்ளலூர் குளம் நிரம்பிவிடாது. இந்தப் பருவமழை முடிவதற்குள், வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் தடையின்றி பாய்ந்தால் மட்டுமே குளம் நிரம்பி வழியும்," இவ்வாறு தன்னார்வலர் மணிகண்டன் கூறினார்.

95 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வெள்ளலூர் குளமானது 15 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. இதன்மூலம், 327 ஏக்கர் விவசாயங்கள் நேரடியாகவும், 20 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவோ பாசனவசதி பெறுவது குறிப்பிடத்தக்கது.