திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவினாசிலிங்கம்பாளையம் பகுதியில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் வாகனங்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, கோவை நோக்கி வேகமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் ஓட்டுநர், வாகன ஆய்வில் ஈடுபட்டிருந்த அதிகாரி செந்தில்ராமை கவனிக்கவில்லை. கார் ஆய்வாளர் அருகே கார் சென்ற போது, திடீரென சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பதற்றத்தில், காரை வேகமாக திருப்பினார். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதியது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த தெக்கலூரைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் அவரது மனைவி மல்லிகா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்திற்குக் காரணமான மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அரைமணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


அவினாசிலிங்கம்பாளையம் பகுதியில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் வாகனங்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, கோவை நோக்கி வேகமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் ஓட்டுநர், வாகன ஆய்வில் ஈடுபட்டிருந்த அதிகாரி செந்தில்ராமை கவனிக்கவில்லை. கார் ஆய்வாளர் அருகே கார் சென்ற போது, திடீரென சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பதற்றத்தில், காரை வேகமாக திருப்பினார். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதியது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த தெக்கலூரைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் அவரது மனைவி மல்லிகா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்திற்குக் காரணமான மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அரைமணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
