இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



அவினாசிலிங்கம்பாளையம் பகுதியில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் வாகனங்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, கோவை நோக்கி வேகமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் ஓட்டுநர், வாகன ஆய்வில் ஈடுபட்டிருந்த அதிகாரி செந்தில்ராமை கவனிக்கவில்லை. கார் ஆய்வாளர் அருகே கார் சென்ற போது, திடீரென சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பதற்றத்தில், காரை வேகமாக திருப்பினார். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதியது.



இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த தெக்கலூரைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் அவரது மனைவி மல்லிகா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்திற்குக் காரணமான மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அரைமணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...