கோவை, திருப்பூர், நீலகிரியில் ரம்ஜான் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்

கோவை: கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வானில் பிறை தெரியாததையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று தான் ராம்ஜான் கொண்டாடப்பட்டது. கோவையில் கரும்புக்கடை, பூமார்க்ட், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.



இதேபோல, ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பூரின் மங்களம், பல்லடம், பெரியதோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். மேலும், திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது. ஜெய்வாபாய் பள்ளி அருகிலும் கூட்டுத்தொழுகை நடந்தது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.



நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா பகுதிகளில், ஈகை திருநாளை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையுடன் கொண்டாடி வருகின்றனர். கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகள் கேரளா மாநில எல்லையை ஒட்டியுள்ளதால் நேற்றே ஈகை திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.



Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...