கோவை: கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வானில் பிறை தெரியாததையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று தான் ராம்ஜான் கொண்டாடப்பட்டது. கோவையில் கரும்புக்கடை, பூமார்க்ட், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இதேபோல, ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பூரின் மங்களம், பல்லடம், பெரியதோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். மேலும், திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது. ஜெய்வாபாய் பள்ளி அருகிலும் கூட்டுத்தொழுகை நடந்தது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா பகுதிகளில், ஈகை திருநாளை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையுடன் கொண்டாடி வருகின்றனர். கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகள் கேரளா மாநில எல்லையை ஒட்டியுள்ளதால் நேற்றே ஈகை திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
