கோவை : கோவை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களை தூர்வாருதல் போன்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார்.
கோவை : கோவை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களை தூர்வாருதல் போன்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சியில் 85வது வார்டு எம்.ஜி.ஆர் நகர் சேத்துமாவாய்க்காலில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக தூர்வாரப்பட்டுள்ளதையும், பொக்ளின் எந்திரம் மூலமாக மேலும் பணிகள் மேற்கொள்வதையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கிரீன் பார்க் பகுதியில் உள்ள வாய்க்காலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், 76-வது வார்டு, எல்.ஐ.சி காலனியில் உள்ள சேத்துமாவாய்க்கால் பகுதியினை பார்வையிட்டார்.

பின்னர், வாய்க்காலில் மழைநீர் செல்வதற்காகவும் அதிக மழையின்போது குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வழிந்தோடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக தேவையான பணிகளை மேற்கொள்ளவும், கழிவு நீர் செல்ல வாய்க்கால் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். குறிச்சி என்.பி.இட்டேரி மற்றும் போத்தனூரில் 95-வது வார்டு பேச்சியம்மன் கோயில் தெருவில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி செல்வதையும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சியில் 85வது வார்டு எம்.ஜி.ஆர் நகர் சேத்துமாவாய்க்காலில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக தூர்வாரப்பட்டுள்ளதையும், பொக்ளின் எந்திரம் மூலமாக மேலும் பணிகள் மேற்கொள்வதையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கிரீன் பார்க் பகுதியில் உள்ள வாய்க்காலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், 76-வது வார்டு, எல்.ஐ.சி காலனியில் உள்ள சேத்துமாவாய்க்கால் பகுதியினை பார்வையிட்டார்.

பின்னர், வாய்க்காலில் மழைநீர் செல்வதற்காகவும் அதிக மழையின்போது குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வழிந்தோடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக தேவையான பணிகளை மேற்கொள்ளவும், கழிவு நீர் செல்ல வாய்க்கால் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். குறிச்சி என்.பி.இட்டேரி மற்றும் போத்தனூரில் 95-வது வார்டு பேச்சியம்மன் கோயில் தெருவில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி செல்வதையும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார்.