கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி : முதற்கட்டமாக ரூ. 50,000 இழப்பீடு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கூடலூரை அடுத்த வாச்சகொல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்னன் (48). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடித்து பாடந்துரை பஜாரில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இரவு 7 மணியளவில் தனியாக வீடு திரும்பியுள்ளார். சுண்ட வயல் பகுதியில் சென்ற போது, அங்கு வந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவர், இறந்த விபரம் யாருக்கும் தெரியாத நிலையில், மறுநாள் காலையில் அந்த வழியாக வந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் அளித்துள்ளார்.



பின்னர், வனத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினரிடம் கிராமவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ராதாகிருஷ்ணனின் உடலை எடுத்துச் செல்லவிடாமல் தடுத்தனர். யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை சமாதானப்படுத்திய வனத்துறையினர் மற்றும் போலீசார், உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, காட்டு யானை தாக்கியதில், உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் மனைவிக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்பட்டது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...