உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நேற்று பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நேற்று பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 



உதகையில் இருந்து குன்னூர் நோக்கி வந்த பேருந்து நேற்று எதிர்பாராதவிதமாக, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நடத்துநர் பிரகாஷ் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு முதலமைச்சரின் உத்தரவுப்படி, குழுக்கள் அமைக்கப்பட்டு உரிய உதவிகள் செய்யப்பட்டுள்ளது. வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்தவர்களுக்கும், மேட்டுப்பாளையம் பகுதியில் யானை தாக்கி காயமடைந்தவருக்கும் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

அதேபோல, மழையினால் சுவர் இடிந்து விழுந்து வந்த இரண்டு நபர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "சட்டப்பேரவையில் 900 பேருக்கு விபத்துக்களால் உண்டான பாதிப்புகளுக்கும், இயற்கையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும். விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்படும் என்றார்

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவர் அசோகன், இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர்வேல் உள்ளிட்ட பல மருத்துவர்களும் உடனிருந்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...