கோவையில் மனைவி இறந்த துக்கம் தாழாமல் கணவன் தற்கொலை

கோவை: அரசு மருத்துவமனை எதிரே உள்ள குளத்தின் ஓரத்தில் இருக்கும் மரத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவர் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: அரசு மருத்துவமனை எதிரே உள்ள குளத்தின் ஓரத்தில் இருக்கும் மரத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவர் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (26). இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பாக கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து, கடந்த 12-ம் தேதி இரவு கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் மணிகண்டன் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். 

ஆத்திரமடைந்த சித்ரா வீட்டில் யாரும் இல்லாதபோது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயங்களோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சித்ராவை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சித்ரா இன்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார்.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட மணிகண்டன் திருச்சி சாலையில் கிளாசிக் டவர் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். 



மனைவியின் இழப்பை வலியைத் தாங்க முடியாமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் உள்ள மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...