கோவை: அரசு மருத்துவமனை எதிரே உள்ள குளத்தின் ஓரத்தில் இருக்கும் மரத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவர் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை: அரசு மருத்துவமனை எதிரே உள்ள குளத்தின் ஓரத்தில் இருக்கும் மரத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவர் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (26). இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பாக கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து, கடந்த 12-ம் தேதி இரவு கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் மணிகண்டன் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
ஆத்திரமடைந்த சித்ரா வீட்டில் யாரும் இல்லாதபோது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயங்களோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சித்ராவை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சித்ரா இன்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார்.
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட மணிகண்டன் திருச்சி சாலையில் கிளாசிக் டவர் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மனைவியின் இழப்பை வலியைத் தாங்க முடியாமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் உள்ள மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.