கேரளா கும்கிகளுக்கு நீலகிரியில் பயிற்சி

நீலகிரி: கும்கி பயிற்சி பெறுவதற்காக கேரள மாநிலத்தில் இருந்து மூன்று யானைகள் தெப்பக்காடுக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.

நீலகிரி: கும்கி பயிற்சி பெறுவதற்காக கேரள மாநிலத்தில் இருந்து மூன்று யானைகள் தெப்பக்காடுக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.



கேரளா மாநிலம் முத்தங்கா யானைகள் காப்பகம், கோணி யானைகள் காப்பகம் மற்றும் கோடநாடு யானைகள் காப்பகத்தில் இருந்து சூரியன், நீலகண்டன், சுரேந்திரன் ஆகிய மூன்று வளர்ப்பு யானைகள் கும்கி பயிற்சி பெறுவதற்காக முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளன.



இந்த மூன்று யானைகளுக்கும் இன்று காலை முதல் கும்கி பயிற்சி அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதுமலையில் பணியாற்றும் பயிற்சி பெற்ற யானை பாகன்கள், அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கவுள்ளனர்.



தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள ஐந்து கும்கி யானைகளை கொண்டு, இந்த மூன்று யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த யானைகளுக்கு மற்ற யானைகளை கட்டுப்படுத்தவும், பிரச்சனைக்குரிய யானைகளை லாரியில் ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....