மாட்டின் பெயரால் இரண்டு முஸ்லிம்கள் கொலை : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாட்டின் பெயரால் இரண்டு முஸ்லிம்கள் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாட்டின் பெயரால் இரண்டு முஸ்லிம்கள் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக, அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எம்.தவ்ஃபீக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

ஜார்கண்ட் மாநிலத்தில் குட்டா என்ற மாவட்டத்தில் எருமை மாடுகளை விலைக்கு வாங்கி வியாபாரத்திற்காக சிராபுதின் அன்சாரி மற்றும் முர்தாஸ் அன்சாரி ஆகிய இரண்டு முஸ்லிம்கள் பன்னட்டி கிராமம் அருகே வாகனத்தில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை இடைமறித்த கும்பல், இருவரையும் கடுமையாகத் தாக்கி, அவர்களைக் கயிற்றில் கட்டி சாலையில் இழுத்துச் சென்று, மேலும், துடிக்கத்-துடிக்க அவர்களை அடித்துக் கொலை செய்துள்ளது. இந்த காட்டு மிராண்டி தனத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வண்மையாகக் கண்டிக்கிறது.

இக்கொலைச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்ததோடு நின்றுவிடாமல், பிணையில் வெளிவர விடாமல், மக்கள் மன்றத்தின் முன், விரைந்து கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்த மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்கள், இந்திய நாட்டில் வாழ்வதற்கே பாதுகாப்பற்ற ஓர் அச்ச நிலை இருந்து வருவதை இந்த சம்பவம் மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த விஷயத்தில் பிரதமரின் கண்டிப்பு வெறும் கண்துடைப்பு என்பது உறுதியாகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...