சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகள் காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- மகுன்டஞ்சாவடி - வீரபாண்டி சாலை, மவேலிபாளையம் - மகுன்டஞ்சாவடி, சங்கரி துர்க் - மவேலிபாளையம் ஆகிய இடங்களில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதனால், சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில், 13-ம் தேதி முதல் ஜுலை 03-ம் தேதி வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கோவை - சேலம் - கோவை இடையே இயக்கப்படும் ரயில் (எண் : 66602/66603) ஈரோடு-சேலம்-ஈரோடு இடையிலான சேவையை வரும் 20-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலின் சேவை அடுத்த மாதம் 03-ம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படும். 

இதேபோல, வரும் 26-ம் தேதி வரை இயக்கப்படும் குறிப்பிட்ட ரயில்கள் சில தினங்களுக்கு தாமதமாக இயக்கப்படுகின்றன. ஐதராபாத் - கொச்சுவெளி வாராந்திர சிறப்பு ரயில், பிலாஷ்பூர் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில், திருவனந்தபுரம்- மும்பை எக்ஸ்பிரஸ், அலப்பி-டாடா அல்லது தன்பாத் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பிலாஷ்பூர்- திருநெல்வேலி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை கோவை எக்ஸ்பிரஸ், ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்பட இருக்கின்றன. 

ஈரோடு-திண்டுக்கல் இடையே மேற்கொள்ளப்படும் பொறியியல் பணிகள் காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி- ஈரோடு பயணிகள் ரயில், ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் வரும் 26-ம் தேதி வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. இதே போல, அடுத்த மாதம் 9-ம் தேதி கோவை-நாகர்கோவில், திருநெல்வேலி-ஈரோடு பயணிகள் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில்சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி சேலம்-விருதாச்சலம் பயணிகள் ரயில் ஆத்தூர்-விருதாச்சலம் இடையே ரத்து செய்யப்படுகிறது. 



இதனிடையே, சேலம் தெற்கு ரயில்வே சார்பில் சங்கரி துர்க் பகுதியில் ஆபத்து கால மீட்புக் குழுவினருக்கு முன்னெச்சரிக்கை மீட்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...