சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் அரசு டெண்டர்கள் வழங்கியது குறித்து முதலமைச்சர் மீது தி.மு.க., புகார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் அரசு டெண்டர்கள் ஒதுக்கியது தொடர்பாக தி.மு.க., சார்பில் விஜிலென்ஸ் கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் அரசு டெண்டர்கள் ஒதுக்கியது தொடர்பாக தி.மு.க., சார்பில் விஜிலென்ஸ் கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தின் கஜானா பொதுமக்களுக்கு செயல்படுகிறதோ இல்லையோ, அ.தி.மு.க., அரசின் ஊழலுக்குப் பயன்படுத்தப்பட்டு பகல் கொள்ளை அநியாயமாக அரங்கேறி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் இமாலய டெண்டர் ஊழல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில், தி.மு.க., நீதிமன்றத்தை நாட தயங்காது.

நெடுஞ்சாலை துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் மோசடி செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெண்டர்களை வழங்கியது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஜிலென்ஸ் கமிஷனருக்கு தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...