கோவை: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் பலியாகிய நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
கோவை: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் பலியாகிய நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

ஊட்டியில் இருந்து 12 பெண்கள் உட்பட 34 பயணிகளுடன் குன்னூரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து மதாடா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திகற்கு சென்ற கேத்தி போலீசார், மீட்புப் பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

அங்கிருந்து அல்மஷ் (29) என்ற பெண் உட்பட 16 பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

ஊட்டியில் இருந்து 12 பெண்கள் உட்பட 34 பயணிகளுடன் குன்னூரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து மதாடா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திகற்கு சென்ற கேத்தி போலீசார், மீட்புப் பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

அங்கிருந்து அல்மஷ் (29) என்ற பெண் உட்பட 16 பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.