தமிழ்நாடு முன்னேறக்கூடாது என்பதற்காக இயக்கம் ஒன்று செயல்படுகிறது : திருப்பூரில் மத்திய அமைச்சர் பேச்சு

கோவை: தமிழ்நாட்டில் எந்தவிதமான தொழில் முன்னேற்றமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக பெரிய இயக்கம் ஒன்று செயல்படுகிறது என்று திருப்பூரில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

கோவை: தமிழ்நாட்டில் எந்தவிதமான தொழில் முன்னேற்றமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக பெரிய இயக்கம் ஒன்று செயல்படுகிறது என்று திருப்பூரில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். 

இந்திய அரசு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் விழா திருப்பூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. 

இதில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் கிருஷ்ண பால் குர்ஜார் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



பின்னர், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திலும், மோடி அரசு அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. 

சிறு குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் இலவசமாக வழங்கப்படுகிறது. 7 வகையான மாற்றுத்திறனாளிகள் தற்போது 21 வகையான மாற்றுத்திறனாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எவ்வித தொழில் முன்னேற்றமும் வந்துவிடக்கூடாது என்பதில் பெரிய இயக்கம் ஒன்று செயல்படுகிறது. 

ஒரு இயக்கம் பல வடிவங்களில் செயல்படுகிறது. அது ஏற்றுமதி முதல் அனைத்து விஷயங்களிலும் பாதிக்கிறது. அதேபோல் எந்தவொரு புதிய விஷயத்தை கொண்டுவரும் போது தற்காலிகமாக பின்னிடவைச் சந்திக்கும். புதிய தொழிற்சாலைகள் வரக்கூடாது என நாம் நினைத்தால் வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் தமிழகத்தில் முதல் நிலையில் இருப்போம்." என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...