உலக இரத்த கொடையாளர் தினம் : கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவை: உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோவை: உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



உலகம் முழுவதும் இன்று இரத்த கொடையாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது, இதனை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் அரசு ரத்த வங்கிகள் இணைந்து நடத்திய இந்த பேரணி இன்று காலை ஒன்பது மணிக்குத் தொடங்கும் என்று மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் காலை 9 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் கூடினர். 



மழை காரணமாக சிறிது காலம் தாமதமாக துவங்கும் என ஒருங்கிணைப்பாளர்கள் என கூறியதை தொடர்ந்து காத்திருந்தனர். நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைப்பார் என்பதாலும் மழை காரணமாக ஏற்கனவே ஒரு மணி நேரம் தாமதமாகி இருந்த நிலையில், பொறுமையிழந்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் பதினோரு மணிக்கு வந்து தொடங்கி வைத்ததால், முனுமுனுத்படியே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை நடைபெற்ற பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் பங்கேற்பே கட்டாயப்படுத்துவதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர்களை காக்க வைக்கப்பட்டது மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...