இப்படி தீர்ப்பு வந்தால் எடப்பாடி அரசு கவிழும் அபாயம்!

சென்னை: தினகரன் ஆதரவில் உள்ள 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் உள்ளது.

சென்னை: தினகரன் ஆதரவில் உள்ள 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ.,க்களில், ஆட்சி நீடிக்க 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவைப்படுகிறார்கள்.

தற்போது அ.தி.மு.க.,வுக்கு 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் அடிப்படியில் தற்போது ஆட்சி நீடிக்க 109 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு போதுமானது.

அதே நேரத்தில், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டால், அ.தி.மு.க., தனது பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.,க்களை தன் வசம் வைத்திருக்க வேண்டும்.

அதனால், எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையை நிரூபிக்க முடியாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க., நாளேடான நமது அம்மா பத்திரிகை சார்பில், அந்த 18 எம்.எல்.ஏ.,க்களுக்கும் மறைமுகமாக அழைப்பு விடுத்து பதினெண்கீழ்க்கணக்கு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிட்டு பாசமழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...