நீலகிரி: குன்னுார் அருகே கரடி தாக்கியதில் மேகலா என்ற பெண் படுகாயமடைந்தார்.
நீலகிரி: குன்னுார் அருகே கரடி தாக்கியதில் மேகலா என்ற பெண் படுகாயமடைந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. அந்த விலங்குகள் அவ்வப்போது மக்களைத் தாக்குவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், குன்னுார் அருகே நேர்கம்பை கிராமத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் (42) என்பவரது மனைவி மேகலா (30) வீட்டிற்கு விறகு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று மேகலா மேல் பாய்ந்து தாக்கியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் கரடியை கட்டையால் தாக்கி விரட்டினர். கரடி புதருக்குள் சென்று மறைந்துவிட்டது. பின்னர், படுகாயமடைந்த மேகலாவை குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அதே பகுதியில் சுற்றித்திரியும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. அந்த விலங்குகள் அவ்வப்போது மக்களைத் தாக்குவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், குன்னுார் அருகே நேர்கம்பை கிராமத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் (42) என்பவரது மனைவி மேகலா (30) வீட்டிற்கு விறகு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று மேகலா மேல் பாய்ந்து தாக்கியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் கரடியை கட்டையால் தாக்கி விரட்டினர். கரடி புதருக்குள் சென்று மறைந்துவிட்டது. பின்னர், படுகாயமடைந்த மேகலாவை குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அதே பகுதியில் சுற்றித்திரியும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.