நீலகிரியில் கரடி தாக்கி பெண் படுகாயம் : கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி: குன்னுார் அருகே கரடி தாக்கியதில் மேகலா என்ற பெண் படுகாயமடைந்தார்.

நீலகிரி: குன்னுார் அருகே கரடி தாக்கியதில் மேகலா என்ற பெண் படுகாயமடைந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. அந்த விலங்குகள் அவ்வப்போது மக்களைத் தாக்குவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், குன்னுார் அருகே நேர்கம்பை கிராமத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் (42) என்பவரது மனைவி மேகலா (30) வீட்டிற்கு விறகு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று மேகலா மேல் பாய்ந்து தாக்கியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் கரடியை கட்டையால் தாக்கி விரட்டினர். கரடி புதருக்குள் சென்று மறைந்துவிட்டது. பின்னர், படுகாயமடைந்த மேகலாவை குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அதே பகுதியில் சுற்றித்திரியும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...