திருப்பூர்: திருப்பூர் அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூரைச் சேர்ந்த குமரவேல் மற்றும் காங்கேயத்தைச் சேர்ந்த வரதராஜன் ஆகியோர் வேலை நிமிர்த்தமாக திருப்பூர் வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் காங்கேயம் நோக்கி சென்றுள்ளனர். புதுப்பாளையம் அருகே அவர்களது வாகனம் நெருங்கிய போது, எதிரே வந்த கார் மோதிய விபத்தில் குமரவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவருடன் சென்ற வரதராஜன் படுகாயங்களுடன் நல்லூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூரைச் சேர்ந்த குமரவேல் மற்றும் காங்கேயத்தைச் சேர்ந்த வரதராஜன் ஆகியோர் வேலை நிமிர்த்தமாக திருப்பூர் வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் காங்கேயம் நோக்கி சென்றுள்ளனர். புதுப்பாளையம் அருகே அவர்களது வாகனம் நெருங்கிய போது, எதிரே வந்த கார் மோதிய விபத்தில் குமரவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவருடன் சென்ற வரதராஜன் படுகாயங்களுடன் நல்லூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.