கோவை : மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்களால் கடந்த 2013-ம் ஆண்டு தூர்வாரப்பட்ட பெரியகுளம், தற்போது தண்ணீரால் நிரம்பி அதன் முழு அழகையும் வெளிக்காட்டுகிறது.
கோவை : மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்களால் கடந்த 2013-ம் ஆண்டு தூர்வாரப்பட்ட பெரியகுளம், தற்போது தண்ணீரால் நிரம்பி அதன் முழு அழகையும் வெளிக்காட்டுகிறது.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளமும் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட தூர்வாரும் பணிகளே இதற்கு முக்கியக் காரணமாகும். பெரியகுளம் நிரம்பி வழிவதால், விவசாயிகள், சிறுதுளி போன்ற அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளமும் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட தூர்வாரும் பணிகளே இதற்கு முக்கியக் காரணமாகும். பெரியகுளம் நிரம்பி வழிவதால், விவசாயிகள், சிறுதுளி போன்ற அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.