பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் தென்மேற்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் தென்மேற்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள், பூங்காக்கள், மேம்பாட்டுப் பணிகள், ஏரிகள், 24 மணி நேர குடி நீர் விநியோகப் பணிகள் குறித்தும்,பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

பருவமழை

தென்மேற்கு பருவமழையையொட்டி மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான மணல் மூட்டைகள் மற்றும் பணியாளர்களை தேவையான இடங்களில் தயார்நிலையில் வைத்திருக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.

மேலும், மாநகராட்சியிலுள்ள குளங்கள், ஏரிகள், குட்டைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்தும், வாய்க்கால்கள் ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்தும், தூர்வாரப்பட்டுள்ள வாய்க்கால்களை பராமரித்தல் குறித்தும், சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் என்.நடராஜன், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் த.ஞானவேல், மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டங்கள்;) எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...