கோவை அருகே மான் இறைச்சி வைத்திருந்த 4 பேருக்கு அபராதம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மான் இறைச்சியை விற்பனை செய்து வந்த 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மான் இறைச்சியை விற்பனை செய்து வந்த 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தை யடுத்த வெள்ளியம்பாளையம் சாலை அருகே அபிலா எனும் பி. பிரேமா (27) என்பவர் வீட்டில் மான் இறைச்சி வைத்து விற்பனை செய்வதாக நேற்று தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக சோதனை நடத்திய வனத்துறையினர் பிரேமாவைக் கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (23) என்பவரிடம் மான் இறைச்சியைப் பெற்று, அதனை விற்று பணத்தை பங்குப் போட்டுக் கொள்வது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்து வந்த ராஜ்குமாரை வனத்துறையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். அப்போது, ஆற்றங்கரையோரம் சுற்றித் திரியும் மான்களை நாய்களைக் கொண்டு வேட்டையாடி இறைச்சியை எடுத்து வந்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார். மேலும், மான் இறைச்சியை விற்பனை செய்ததாக ஜி. பிரேமா (28), கே. நஞ்சம்மாள் (74) ஆகியோரும் பிடிபட்டனர்.



அவர்களில்,வீட்டில் மான் இறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக அபிலா மற்றும் ராஜ்குமாருக்கு தலா ரூ. 20,000-மும், பிரேமா மற்றும் நஞ்சம்மாளுக்கு ரூ. 5,000-மும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து 4 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...