திருப்பூர்: திருப்பூரில் ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மகள் காவ்யா ஶ்ரீ. அதே பகுதியில் உள்ள வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளியை விட்டு வீட்டுக்கு சென்ற காவ்யா ஶ்ரீ, குளியலறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்த பொழுது, சுடிதார் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலம்பாளையம் போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பள்ளி ஆசிரியர் திட்டியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார், சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மகள் காவ்யா ஶ்ரீ. அதே பகுதியில் உள்ள வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளியை விட்டு வீட்டுக்கு சென்ற காவ்யா ஶ்ரீ, குளியலறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்த பொழுது, சுடிதார் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலம்பாளையம் போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பள்ளி ஆசிரியர் திட்டியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார், சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
