கோவையில் பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கோவை : பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் தருவதாகக் கூறி மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீட்டையும் வழங்கக் கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் தருவதாகக் கூறி மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீட்டையும் வழங்கக் கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலை செய்ய முடிவு செய்தார். இதற்காக, கோவை பாப்பநாயகன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.ஜி.எஸ்., டிரேடர்ஸ் என்ற பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜுவை அணுகியுள்ளார். அவரிடம் இரு இயந்திரம் வாங்க ரூ. 13.65 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார்.

ஆனால், பணம் கொடுத்தும் நீண்ட நாட்களாகியும், இயந்திரம் தராமல் மோசடி செய்ததால் கடந்த 2016-ல் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் நாகராஜன் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இயந்திரத்தை அளிக்காமல் மோசடியில் ஈடுபட்ட செல்வராஜுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 12.4 லட்சம் தொகையுடன் 9% வட்டியுடன் இழப்பீடு வழங்க நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டுள்ளார். 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....