திருப்பூர் : தினசரி மார்கெட்டில் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இடைத்தரகர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : தினசரி மார்கெட்டில் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இடைத்தரகர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம் அருகே தென்னம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தினசரி காய்கறி மார்கெட்டில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட காய்கறிகளை நேரடியாக விற்க வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள இடைத்தரகர்கள் விவசாயிகள் வருவதற்குள் வெளிமாநில காய்கறிகளை விற்பனை செய்து விடுகின்றனர். இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் இடைத்தரகளை கண்டித்து தினசரி மார்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மார்கெட்டிற்குள் சென்ற விவசாயிகள் இடைத்தரகர்களிடம் இனி காய்கறிகளை விற்கக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருதரப்பினரிடையே சமரசத்தை ஏற்படுத்தினர். பின்பு, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றனர்.
பல்லடம் அருகே தென்னம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தினசரி காய்கறி மார்கெட்டில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட காய்கறிகளை நேரடியாக விற்க வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள இடைத்தரகர்கள் விவசாயிகள் வருவதற்குள் வெளிமாநில காய்கறிகளை விற்பனை செய்து விடுகின்றனர். இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் இடைத்தரகளை கண்டித்து தினசரி மார்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மார்கெட்டிற்குள் சென்ற விவசாயிகள் இடைத்தரகர்களிடம் இனி காய்கறிகளை விற்கக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருதரப்பினரிடையே சமரசத்தை ஏற்படுத்தினர். பின்பு, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றனர்.