தினசரி மார்க்கெட் இடைத்தரகர்களைக் கண்டித்து திருப்பூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : தினசரி மார்கெட்டில் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இடைத்தரகர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : தினசரி மார்கெட்டில் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இடைத்தரகர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பல்லடம் அருகே தென்னம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தினசரி காய்கறி மார்கெட்டில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட காய்கறிகளை நேரடியாக விற்க வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள இடைத்தரகர்கள் விவசாயிகள் வருவதற்குள் வெளிமாநில காய்கறிகளை விற்பனை செய்து விடுகின்றனர். இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் இடைத்தரகளை கண்டித்து தினசரி மார்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது,  மார்கெட்டிற்குள் சென்ற விவசாயிகள் இடைத்தரகர்களிடம் இனி காய்கறிகளை விற்கக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருதரப்பினரிடையே சமரசத்தை ஏற்படுத்தினர். பின்பு, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றனர். 

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...