காங்கிரசிடம் கம்யூனிஸ்ட் எப்போதும் சரணடையாது : கோவையில் சுதாகர் ரெட்டி பேட்டி

கோவை : அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரணடையாது என அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கோவை : அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரணடையாது என அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மாநில குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்துள்ளது. அதேசமயம், அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. 

பிரதமர் மோடிக்கு மாவோயிஸ்ட்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கடிதம் கைப்பற்றப்பட்டதில், முரண்பாடுகள் உள்ளன. மதச்சார்பின்மை, ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க.,வை வீழ்த்துவோம். ஆனால், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமை எங்களுக்கு தேவையில்லை. தலைவர்களை விட கொள்கைகளே மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸிடம் சரணடையாது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அ.தி.மு.க., அரசு பா.ஜ.க.,வின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் இணை செயலாளர்களாக தனியார் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிக்கலாம் என்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் உள்ளவர்களைக் கொண்டு வர முயற்சி நடக்கிறது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...