புழுப்பிடிக்கும் பிரேதங்கள் : அகோர நிலையில் பொள்ளாச்சி மருத்துவமனை

கோவை: கோடிக்கணக்கான மக்கள் சூழ்ந்த இந்த சமூகத்தில் ஒருவர் நிம்மதியாய் வாழ்ந்து மரணிப்பது என்பது ஒரு வரம் தான். ஆனால், அந்த கொடுப்பனை பலருக்கும் கிடைப்பதில்லை. பணம், பதவி, அதிகாரம், புகழ் போன்ற போதை வஸ்துக்கள் சக மனிதனுக்கும் சேர்த்தே இந்த உலகம் என்பதை மறைத்து விடுகின்றன.


கோவை: கோடிக்கணக்கான மக்கள் சூழ்ந்த இந்த சமூகத்தில் ஒருவர் நிம்மதியாய் வாழ்ந்து மரணிப்பது என்பது ஒரு வரம் தான். ஆனால், அந்த கொடுப்பனை பலருக்கும் கிடைப்பதில்லை. பணம், பதவி, அதிகாரம், புகழ் போன்ற போதை வஸ்துக்கள் சக மனிதனுக்கும் சேர்த்தே இந்த உலகம் என்பதை மறைத்து விடுகின்றன. 

இதனால், மனிதனாலேயே மனிதன் துன்பப்படும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. வாழும் வரை தான் நிம்மதியில்லை, மரணத்திலாவது மதிப்பு கிடைக்கும் என்றால், அதையும் கேள்விக்குறியாக்கிவிடுகிறது அரசு. 

உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு கூட காலம் தாழ்த்திய கதையெல்லாம் நாம் அறிந்ததே.!

இதையெல்லாம் கடந்து, உயிரிழந்தவர்களின் சடலத்தை புழு பிடிக்க வைத்து, நாற்றம் எழும்பச் செய்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது பொள்ளாச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை.



ஆயிரக்கணக்கில்..

பொள்ளாச்சியில் செயல்படும் அரசு தலைமை மருத்துவமனையை ஆனைமலை, உடுமலை, வால்பாறை, நெகமம் என்று பொள்ளாச்சியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் 2 ஆயிரம் வெளி நோயாளிகளும், 800-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 

போதிய அடிப்படை வசதிகள் இல்லாத இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளின் உடல் நிலை மோசமானால், அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப அந்த மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரைக்கிறது. 



அவ்வாறு, பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்வதற்கான சுமார் ஒன்றரை மணி நேர பயணத்தில் நோயாளிகள் தங்கள் உயிரைக் கையில் பிடித்தே பயணிக்கின்றனர். அதனால், சிலர் உயிரிழந்தும் விடுகின்றனர்.



பிரேதங்கள்

இந்த மருத்துவமனையின் கீழ் 15 சிறிய மருத்துவமனைகள் செயல்படுகின்றன. சிகிச்சை பலனின்றியும், விபத்தில் சிக்கியும், கொலை அல்லது தற்கொலை செய்தும் இறந்தவர்களின் உடல்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன.

ஆனால், பிரேதே பரிசோதனைக்கு சரியான வசதிகள் இல்லாத காரணத்தாலும், குளிர்சாதனப் பெட்டிகள் போதுமான அளவில் இல்லாத காரணத்தாலும், சடலங்கள் கேட்பாரற்று கிடைக்கின்றன. அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பல சடலங்கள் புழுப்பிடித்து அழுகிய நிலையில் கிடக்கின்றன.



ஆதரவற்றோர்

சமீபத்தில் விபத்தில் சிக்கி பலியான வட மாநில தொழிலாளி ஒருவரது சடலம் இந்த மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வந்தது. கேட்பதற்கு ஆள் இல்லாத அந்த வாலிபரின் சடலம் ஆதரவாற்றோர் 'லிஸ்ட்'ல் சேர்க்கப்பட சுமார் இருபது நாட்களாக அந்த சடலம் உடற்கூறாய்வு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. 

எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வைக்கப்பட்ட காரணத்தால் அந்த சடலம் அழுகி, புழு ஊறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆதரவற்றவர்களை மரணத்திற்குப் பின்னும் கொடுமைப்படுத்தும் காட்சிகள் உடலை கூச வைத்தது.

குழந்தைகள் நலம்

சடலங்கள் இப்படி அழுகிய நிலையில் விடப்பட, இந்த பிணவறையின் அருகிலேயே குழந்தைகள் நலப் பிரிவும் செயல்படுகிறது. இதனால், பிஞ்சுக் குழந்தைகளும் நச்சுக் காற்றினால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் மேலும் அதிகமாகிறது. நோய்க்கு சிகிச்சை பெறவே ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். 

ஆனால், அவர்கள் மீது துளியளவும் அக்கறையின்றி சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மருத்துவமனை நிர்வாகமும், அரசும் அவரவர் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதும், லட்சக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே பொள்ளாச்சி மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...