கோவை: வர்தா புயல் நிவாரணம் தொடர்பாக அரசு ஊழியர்களிடம் ஒருநாள் சம்பளம் பிடிக்கக் கடந்த 2016-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட மனுவிற்கு 2 ஆண்டுகள் கழித்து, தற்போது அம்மனுவைப் பரிசீலிப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் பதில் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வர்தா புயல் நிவாரணம் தொடர்பாக அரசு ஊழியர்களிடம் ஒருநாள் சம்பளம் பிடிக்கக் கடந்த 2016-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட மனுவிற்கு 2 ஆண்டுகள் கழித்து, தற்போது அம்மனுவைப் பரிசீலிப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் பதில் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய வர்தா புயலால், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதற்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களிடமும் ஒப்புதல் பெற்று, ஒரு நாள் ஊதியத்தை நிவாரணத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சிரியரிடம் 2016-ம் டிசம்பர் 19-ம் தேதி ஆண்டு மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் ஏதும் தெரியாத நிலையில், மீண்டும் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின், 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜுன் 8-ம் தேதி இது குறித்து பரீசிலனைக்கு எடுத்துக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இது மனுதாரரை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் நம்மிடம் கூறுகையில், "வர்தா புயல் வந்து 2 ஆண்டுகள் கழித்து மனு பரீசிலனை செய்யப்பட்டது. இது மாவட்ட நிர்வாகத்தின் காலம் கடந்த நடவடிக்கையாகும். மனுக்கள் மீதான பரீசிலனை காலம் கடந்து செய்யப்படுவதால் என்ன பயன் உள்ளது. இது குறித்து விளக்கம் கேட்ட போது வருவாய் பிரிவில் ஆட்கள் இல்லை, தற்போது தான் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறுகின்றனர். மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு இது ஒன்றே சாட்சி," என்றார்.
இதுபோன்ற காலதாமதம் நடவடிக்கையால் குறைதீர் கூட்டத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய வர்தா புயலால், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதற்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களிடமும் ஒப்புதல் பெற்று, ஒரு நாள் ஊதியத்தை நிவாரணத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சிரியரிடம் 2016-ம் டிசம்பர் 19-ம் தேதி ஆண்டு மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் ஏதும் தெரியாத நிலையில், மீண்டும் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின், 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜுன் 8-ம் தேதி இது குறித்து பரீசிலனைக்கு எடுத்துக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இது மனுதாரரை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் நம்மிடம் கூறுகையில், "வர்தா புயல் வந்து 2 ஆண்டுகள் கழித்து மனு பரீசிலனை செய்யப்பட்டது. இது மாவட்ட நிர்வாகத்தின் காலம் கடந்த நடவடிக்கையாகும். மனுக்கள் மீதான பரீசிலனை காலம் கடந்து செய்யப்படுவதால் என்ன பயன் உள்ளது. இது குறித்து விளக்கம் கேட்ட போது வருவாய் பிரிவில் ஆட்கள் இல்லை, தற்போது தான் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறுகின்றனர். மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு இது ஒன்றே சாட்சி," என்றார்.
இதுபோன்ற காலதாமதம் நடவடிக்கையால் குறைதீர் கூட்டத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.