2016-ல் கொடுக்கப்பட்ட மனுவிற்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு பதில்: கோவை மாவட்டம் நிர்வாகத்தின் நடவடிக்கையால் பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை: வர்தா புயல் நிவாரணம் தொடர்பாக அரசு ஊழியர்களிடம் ஒருநாள் சம்பளம் பிடிக்கக் கடந்த 2016-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட மனுவிற்கு 2 ஆண்டுகள் கழித்து, தற்போது அம்மனுவைப் பரிசீலிப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் பதில் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: வர்தா புயல் நிவாரணம் தொடர்பாக அரசு ஊழியர்களிடம் ஒருநாள் சம்பளம் பிடிக்கக் கடந்த 2016-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட மனுவிற்கு 2 ஆண்டுகள் கழித்து, தற்போது அம்மனுவைப் பரிசீலிப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் பதில் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய வர்தா புயலால், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதற்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களிடமும் ஒப்புதல் பெற்று, ஒரு நாள் ஊதியத்தை நிவாரணத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சிரியரிடம் 2016-ம் டிசம்பர் 19-ம் தேதி ஆண்டு மனு அளிக்கப்பட்டது.



இது குறித்து தகவல் ஏதும் தெரியாத நிலையில், மீண்டும் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின், 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜுன் 8-ம் தேதி இது குறித்து பரீசிலனைக்கு எடுத்துக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இது மனுதாரரை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.



இது குறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் நம்மிடம் கூறுகையில், "வர்தா புயல் வந்து 2 ஆண்டுகள் கழித்து மனு பரீசிலனை செய்யப்பட்டது. இது மாவட்ட நிர்வாகத்தின் காலம் கடந்த நடவடிக்கையாகும். மனுக்கள் மீதான பரீசிலனை காலம் கடந்து செய்யப்படுவதால் என்ன பயன் உள்ளது. இது குறித்து விளக்கம் கேட்ட போது வருவாய் பிரிவில் ஆட்கள் இல்லை, தற்போது தான் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறுகின்றனர். மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு இது ஒன்றே சாட்சி," என்றார்.

இதுபோன்ற காலதாமதம் நடவடிக்கையால் குறைதீர் கூட்டத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...