கோவை: அரசுப் பள்ளிகளை பாதுகாக்க கோரியும், தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையை தடுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் மாசிலாமணி கமிட்டியை அமைத்து தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை உடனடியாக நிர்ணயம் செய்யவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: அரசுப் பள்ளிகளை பாதுகாக்க கோரியும், தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையை தடுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் மாசிலாமணி கமிட்டியை அமைத்து தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை உடனடியாக நிர்ணயம் செய்யவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மேலும், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து தனியார் பள்ளிகளிலும் உறுதி செய்திட வலியுறுத்தியும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாணவர்கள் கோஷமிட்டனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் பீளமேடு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கழிப்பறை உபயோகிக்கும் வண்ணம் தரமாக இல்லை என தெரியவந்துள்ளதாகவும், ஆண்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை என்பதும் விளையாட்டு மைதானம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், ஆண்டிபாளையம் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ள சுற்றுச்சுவர் மிகவும் பழுதடைந்தும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சேரிபாளையம் உயர்நிலைப் பள்ளியில் இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி 95 சதவீதமாக இருப்பதாகவும், ஆனாலும், அந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி சுற்றுச்சூழல் மற்றும் கல்வி கற்க போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பது தெரியவந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவினாசி சாலையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் போதுமான சுகாதார பணிகள் மாணவர்களே மேற்கொள்வதாகவும், அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளை சரி செய்து, மாணவர்கள் கல்வி கற்க வசதியாக அனைத்தையும் சீரமைக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.
இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மேலும், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து தனியார் பள்ளிகளிலும் உறுதி செய்திட வலியுறுத்தியும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாணவர்கள் கோஷமிட்டனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் பீளமேடு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கழிப்பறை உபயோகிக்கும் வண்ணம் தரமாக இல்லை என தெரியவந்துள்ளதாகவும், ஆண்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை என்பதும் விளையாட்டு மைதானம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், ஆண்டிபாளையம் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ள சுற்றுச்சுவர் மிகவும் பழுதடைந்தும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சேரிபாளையம் உயர்நிலைப் பள்ளியில் இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி 95 சதவீதமாக இருப்பதாகவும், ஆனாலும், அந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி சுற்றுச்சூழல் மற்றும் கல்வி கற்க போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பது தெரியவந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவினாசி சாலையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் போதுமான சுகாதார பணிகள் மாணவர்களே மேற்கொள்வதாகவும், அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளை சரி செய்து, மாணவர்கள் கல்வி கற்க வசதியாக அனைத்தையும் சீரமைக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.
இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
