நடப்பு ஆண்டில் பிளஸ்1, பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வுக்கான தேதிகளை பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் பிளஸ்1, பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வுக்கான தேதிகளை பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக, மேல்நிலைக் கல்வியான பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான மொழி 2-ம் தாளை ரத்து செய்து தமிழக அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில், கல்வியாண்டின் துவக்கத்திலேயே பிளஸ்2, பிளஸ்1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- பிளஸ்2 பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1 முதல் மார்ச் 19-ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவு 19.04.19 அன்று வெளியிடப்படும். பிளஸ்1 பொதுத்தேர்வு 06.03.19 முதல் 22.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவு 08.05.19 அன்று வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.19 முதல் 29.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவுகள் 29.4.19 அன்று வெளியிடப்படும்.
மாணவர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும், என்றார்.