2018-19-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

நடப்பு ஆண்டில் பிளஸ்1, பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வுக்கான தேதிகளை பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.


நடப்பு ஆண்டில் பிளஸ்1, பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வுக்கான தேதிகளை பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. 

பள்ளிக் கல்வித்துறையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக, மேல்நிலைக் கல்வியான பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான மொழி 2-ம் தாளை ரத்து செய்து தமிழக அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில், கல்வியாண்டின் துவக்கத்திலேயே பிளஸ்2, பிளஸ்1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- பிளஸ்2 பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1 முதல் மார்ச் 19-ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவு 19.04.19 அன்று வெளியிடப்படும். பிளஸ்1 பொதுத்தேர்வு 06.03.19 முதல் 22.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவு 08.05.19 அன்று வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.19 முதல் 29.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவுகள் 29.4.19 அன்று வெளியிடப்படும். 

மாணவர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும், என்றார். 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....