கோவை: கோவையில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவித்துள்ளார்.
கோவை: கோவையில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வால்பாறையில் வெளுத்தும் வாங்கும் மழையால், அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், கோவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல, நீலகிரியில் உதகை, கூடலு}ர் மற்றும் பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அறிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வால்பாறையில் வெளுத்தும் வாங்கும் மழையால், அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், கோவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல, நீலகிரியில் உதகை, கூடலு}ர் மற்றும் பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அறிவித்துள்ளார்.