கோவை: ஆட்டோ வாடகையை உயர்த்த வலியுறுத்தி சோசியல் டெமாக்ரடிக் யூனியன் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: ஆட்டோ வாடகையை உயர்த்த வலியுறுத்தி சோசியல் டெமாக்ரடிக் யூனியன் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று சோசியல் டெமாக்ரடிக் யூனியன் தொழிற்சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் தொழிற்சங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25-ம், கிலோ மீட்டருக்கு ரூ.12 அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். அப்போது, பெட்ரோல் விலை ரூ.48- ஆகவும், டீசல் விலை ரூ.37- ஆகவும் இருந்தது. தற்போது பெட்ரோல் விலை அதிகபட்சமாக உயர்ந்துவிட்டது. எனவே, குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.35-ஆகவும், கிலோ மீட்டருக்கு ரூ.18-ஆகவும் உயர்த்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சூழலில், அரசு கட்டணத்தை உயர்த்தாத காரணத்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் நியாயமான கோரிக்கையை அரசு நடைமுறைப் படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று சோசியல் டெமாக்ரடிக் யூனியன் தொழிற்சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் தொழிற்சங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25-ம், கிலோ மீட்டருக்கு ரூ.12 அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். அப்போது, பெட்ரோல் விலை ரூ.48- ஆகவும், டீசல் விலை ரூ.37- ஆகவும் இருந்தது. தற்போது பெட்ரோல் விலை அதிகபட்சமாக உயர்ந்துவிட்டது. எனவே, குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.35-ஆகவும், கிலோ மீட்டருக்கு ரூ.18-ஆகவும் உயர்த்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சூழலில், அரசு கட்டணத்தை உயர்த்தாத காரணத்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் நியாயமான கோரிக்கையை அரசு நடைமுறைப் படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.