ஆட்டோ வாடகையை உயர்த்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: ஆட்டோ வாடகையை உயர்த்த வலியுறுத்தி சோசியல் டெமாக்ரடிக் யூனியன் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: ஆட்டோ வாடகையை உயர்த்த வலியுறுத்தி சோசியல் டெமாக்ரடிக் யூனியன் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று சோசியல் டெமாக்ரடிக் யூனியன் தொழிற்சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 

எங்கள் தொழிற்சங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25-ம், கிலோ மீட்டருக்கு ரூ.12 அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். அப்போது, பெட்ரோல் விலை ரூ.48- ஆகவும், டீசல் விலை ரூ.37- ஆகவும் இருந்தது. தற்போது பெட்ரோல் விலை அதிகபட்சமாக உயர்ந்துவிட்டது. எனவே, குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.35-ஆகவும், கிலோ மீட்டருக்கு ரூ.18-ஆகவும் உயர்த்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சூழலில், அரசு கட்டணத்தை உயர்த்தாத காரணத்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் நியாயமான கோரிக்கையை அரசு நடைமுறைப் படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...