மக்களிடம் வரவேற்பைப் பெற்ற உதய் எக்ஸ்பிரசின் தானியங்கு உணவு விநியோக எந்திரம்

கோவை : கோவை - பெங்களூரூ இடையே விடப்பட்ட உதய் எக்ஸ்பிரசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன தானியங்கு உணவு விநியோக எந்திரம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.


கோவை : கோவை - பெங்களூரூ இடையே விடப்பட்ட உதய் எக்ஸ்பிரசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன தானியங்கு உணவு விநியோக எந்திரம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கோவை மற்றும் பெங்களூரூ இடையே அதிநவீன உதய் எக்ஸ்பிரஸ் சேவை கடந்த 8-ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் ராஜென் கொஹைன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முழுவதும் குளிர்சாதன வசதியுடன் இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த அதிநவீன ரயிலில், மினி டைனிங் ஹால், தானியங்கு உணவு விநியோக எந்திரம் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கியுள்ளன. 

ஏ.வி.எம்., எனப்படும் இந்த தானியங்கு உணவு விநியோக எந்திரத்தில், டீ, காபி, பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுகள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "ஏ.வி.எம்., எந்திரத்தில் பொருட்களின் பட்டியல் காட்சிப்படுத்தப்படும். பயணிகளுக்கு தேவையான பொருட்களின் பெயர் அடங்கிய பொத்தானை அழுத்தினால், அதற்கான கட்டணம் செலுத்தி வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம். இதேபோல, டீ, காபி போன்றவைகளுக்கென தனி எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, உதய் எக்ஸ்பிரசில் பணத்தை செலுத்தி பொருட்களை வாங்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. காலப்போக்கில், பணமில்லா பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்படும்," எனக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...