கோவை : கோவை - பெங்களூரூ இடையே விடப்பட்ட உதய் எக்ஸ்பிரசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன தானியங்கு உணவு விநியோக எந்திரம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவை : கோவை - பெங்களூரூ இடையே விடப்பட்ட உதய் எக்ஸ்பிரசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன தானியங்கு உணவு விநியோக எந்திரம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கோவை மற்றும் பெங்களூரூ இடையே அதிநவீன உதய் எக்ஸ்பிரஸ் சேவை கடந்த 8-ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் ராஜென் கொஹைன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முழுவதும் குளிர்சாதன வசதியுடன் இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த அதிநவீன ரயிலில், மினி டைனிங் ஹால், தானியங்கு உணவு விநியோக எந்திரம் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கியுள்ளன.
ஏ.வி.எம்., எனப்படும் இந்த தானியங்கு உணவு விநியோக எந்திரத்தில், டீ, காபி, பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுகள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "ஏ.வி.எம்., எந்திரத்தில் பொருட்களின் பட்டியல் காட்சிப்படுத்தப்படும். பயணிகளுக்கு தேவையான பொருட்களின் பெயர் அடங்கிய பொத்தானை அழுத்தினால், அதற்கான கட்டணம் செலுத்தி வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம். இதேபோல, டீ, காபி போன்றவைகளுக்கென தனி எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, உதய் எக்ஸ்பிரசில் பணத்தை செலுத்தி பொருட்களை வாங்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. காலப்போக்கில், பணமில்லா பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்படும்," எனக் கூறப்பட்டுள்ளது.