கோவை: கோவை அருகே குடிபோதையில் ஓட்டிச் செல்லப்பட்ட கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாயும், மகனும் படுகாயமடைந்தனர்.
கோவை: கோவை அருகே குடிபோதையில் ஓட்டிச் செல்லப்பட்ட கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாயும், மகனும் படுகாயமடைந்தனர்.
சிறுவாணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சாலையில் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், போளுவாம்பட்டி பகுதியில் வெள்ளை நிற ஸ்விப்ட் கார் ஒன்று தறிகெட்டு ஓடியது. குமரன் கல்யாண மண்டபம் அருகே இந்த கார் சென்ற போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சந்தோஷ் ராஜ் என்பவரும், அவரது தாயும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய கார் நிறுத்தாமல் சென்றது. இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், காரை விரட்டிச் சென்றனர். இதையறிந்து, மேற்கொண்டு வாகனத்தை இயக்க முடியாது என்று அறிந்த ஓட்டுநர் உள்பட அதில் பயணித்தவர்கள், காரை பாதியில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். பின்னர், அங்கு சென்ற அப்பகுதியினர், காரை சோதனை செய்ததில், உள்ளே ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தைக் கண்டனர். எனவே, காரில் இருந்த 4 அல்லது 5 இளைஞர்கள் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.

இதனிடையே, விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக, ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவாணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சாலையில் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், போளுவாம்பட்டி பகுதியில் வெள்ளை நிற ஸ்விப்ட் கார் ஒன்று தறிகெட்டு ஓடியது. குமரன் கல்யாண மண்டபம் அருகே இந்த கார் சென்ற போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சந்தோஷ் ராஜ் என்பவரும், அவரது தாயும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய கார் நிறுத்தாமல் சென்றது. இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், காரை விரட்டிச் சென்றனர். இதையறிந்து, மேற்கொண்டு வாகனத்தை இயக்க முடியாது என்று அறிந்த ஓட்டுநர் உள்பட அதில் பயணித்தவர்கள், காரை பாதியில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். பின்னர், அங்கு சென்ற அப்பகுதியினர், காரை சோதனை செய்ததில், உள்ளே ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தைக் கண்டனர். எனவே, காரில் இருந்த 4 அல்லது 5 இளைஞர்கள் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.

இதனிடையே, விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக, ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.