போளுவாம்பட்டி அருகே குடிபோதையில் தாறுமாறாக ஓட்டியக் கார் மோதி 2 பேர் படுகாயம்

கோவை: கோவை அருகே குடிபோதையில் ஓட்டிச் செல்லப்பட்ட கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாயும், மகனும் படுகாயமடைந்தனர்.

கோவை: கோவை அருகே குடிபோதையில் ஓட்டிச் செல்லப்பட்ட கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாயும், மகனும் படுகாயமடைந்தனர்.

சிறுவாணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சாலையில் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், போளுவாம்பட்டி பகுதியில் வெள்ளை நிற ஸ்விப்ட் கார் ஒன்று தறிகெட்டு ஓடியது. குமரன் கல்யாண மண்டபம் அருகே இந்த கார் சென்ற போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சந்தோஷ் ராஜ் என்பவரும், அவரது தாயும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.



இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய கார் நிறுத்தாமல் சென்றது. இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், காரை விரட்டிச் சென்றனர். இதையறிந்து, மேற்கொண்டு வாகனத்தை இயக்க முடியாது என்று அறிந்த ஓட்டுநர் உள்பட அதில் பயணித்தவர்கள், காரை பாதியில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். பின்னர், அங்கு சென்ற அப்பகுதியினர், காரை சோதனை செய்ததில், உள்ளே ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தைக் கண்டனர். எனவே, காரில் இருந்த 4 அல்லது 5 இளைஞர்கள் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.



இதனிடையே, விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக, ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...