சென்னை: மேல்நிலைக் கல்வியில் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒரே தாளாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மேல்நிலைக் கல்வியில் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒரே தாளாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை முதல் தாள், இரண்டாம் தாள் என்று இரண்டு தாள்களாக பயின்று வந்தனர்.
இந்த சூழலில், முறை மாற்றப்பட்டு தமிழ் பாடத்திற்கும், ஆங்கிலப் பாடத்திற்கும் தமிழ், ஆங்கிலம் என ஒரே தாளாக கற்பிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் முடிவால் மேல்நிலை பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் எழுத வேண்டிய தேர்வுகளின் எண்ணிக்கை 6-ஆக குறைகிறது.
அண்மையில், சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை முதல் தாள், இரண்டாம் தாள் என்று இரண்டு தாள்களாக பயின்று வந்தனர்.
இந்த சூழலில், முறை மாற்றப்பட்டு தமிழ் பாடத்திற்கும், ஆங்கிலப் பாடத்திற்கும் தமிழ், ஆங்கிலம் என ஒரே தாளாக கற்பிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் முடிவால் மேல்நிலை பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் எழுத வேண்டிய தேர்வுகளின் எண்ணிக்கை 6-ஆக குறைகிறது.
அண்மையில், சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.