பருவமழையை பயன்படுத்தத் தவறுகிறதா வெள்ளலூர் ராஜவாய்க்கால்: புதர்கள், ஆக்கிரமிப்புகள்தான் காரணமா..?

கோவை: கோவையில் கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் புதர்களால் மண்டிக்கிடக்கும் வெள்ளலூர் ராஜவாய்க்காலில் தண்ணீர் பாய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவையில் கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் புதர்களால் மண்டிக்கிடக்கும் வெள்ளலூர் ராஜவாய்க்காலில் தண்ணீர் பாய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கோவை மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நொய்யல் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர், நேற்று மாலை வெள்ளலூர் ராஜவாய்க்காலை அடைந்துள்ளது.



பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மேற்கொண்டனர். ஆனால், இந்த சீரமைப்பு பணிகள் வீணாகியதை உணர்த்தும் வகையில், வாய்க்காலில் மீண்டும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.



மேலும், ராஜவாய்க்கால் பகுதிகளில் இன்னும் ஆக்கிரமிப்பில் 200 வீடுகள் உள்ளது.

எனவே, பருவமழையினால் கிடைக்கும் தண்ணீரானது, தடையில்லாமல் பாய வழி செய்யும் வகையில், நொய்யலுடன் பயணிக்கும் குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மீண்டும் சீரமைப்பு பணியில் ஈடுபட ஆயத்தமாகியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...