கோவை: கோவையில் கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் புதர்களால் மண்டிக்கிடக்கும் வெள்ளலூர் ராஜவாய்க்காலில் தண்ணீர் பாய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவையில் கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் புதர்களால் மண்டிக்கிடக்கும் வெள்ளலூர் ராஜவாய்க்காலில் தண்ணீர் பாய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கோவை மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நொய்யல் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர், நேற்று மாலை வெள்ளலூர் ராஜவாய்க்காலை அடைந்துள்ளது.

பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மேற்கொண்டனர். ஆனால், இந்த சீரமைப்பு பணிகள் வீணாகியதை உணர்த்தும் வகையில், வாய்க்காலில் மீண்டும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.

மேலும், ராஜவாய்க்கால் பகுதிகளில் இன்னும் ஆக்கிரமிப்பில் 200 வீடுகள் உள்ளது.
எனவே, பருவமழையினால் கிடைக்கும் தண்ணீரானது, தடையில்லாமல் பாய வழி செய்யும் வகையில், நொய்யலுடன் பயணிக்கும் குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மீண்டும் சீரமைப்பு பணியில் ஈடுபட ஆயத்தமாகியுள்ளனர்.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கோவை மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நொய்யல் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர், நேற்று மாலை வெள்ளலூர் ராஜவாய்க்காலை அடைந்துள்ளது.

பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மேற்கொண்டனர். ஆனால், இந்த சீரமைப்பு பணிகள் வீணாகியதை உணர்த்தும் வகையில், வாய்க்காலில் மீண்டும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.

மேலும், ராஜவாய்க்கால் பகுதிகளில் இன்னும் ஆக்கிரமிப்பில் 200 வீடுகள் உள்ளது.
எனவே, பருவமழையினால் கிடைக்கும் தண்ணீரானது, தடையில்லாமல் பாய வழி செய்யும் வகையில், நொய்யலுடன் பயணிக்கும் குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மீண்டும் சீரமைப்பு பணியில் ஈடுபட ஆயத்தமாகியுள்ளனர்.