கோவை: சாலையில் ஆதரவற்று தவிக்கும் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களை மீட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வருகிறது.
கோவை: சாலையில் ஆதரவற்று தவிக்கும் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களை மீட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் ஆதரவற்று இருக்கும் முதியவர்களுக்கு, ஊடல் ஊனமுற்றவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களில் ஈரநெஞ்சம் அறக்கட்டளையும் ஒன்றாகும். இதற்காக, அந்த அறக்கட்டளையின் சார்பில் ஆர்.எஸ். புரத்தில் காப்பகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாலையில் ஆதரவற்று தவிக்கும் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை அடைக்கலம் கொடுத்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோரை மாநகராட்சி மற்றும் பொதுமக்களின் உதவியுடன் நேற்று மீட்டனர். அவர்களுக்கு முடிதிருத்தம் செய்து, நகங்களை வெட்டிவிடுதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
