மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றின் கரையோரப் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றின் கரையோரப் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழைக் காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவான 100 அடியில் 98 அடி வரை நிரம்பியது. இதனால், பாதுகாப்பு கருதி அணை நேற்று திறக்கப்பட்டது. அணையில் இருந்து சுமார் 8,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து, பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் சிறுமுகை, ஒடந்துரை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், நெல்லித்துரை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மேட்டுப்பாளையம் சென்ற கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், வெள்ளபெருக்கு காரணமாக வருவாய்த்துறை எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆற்றுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஓடந்துரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், இரவு முழுவதும் தண்ணீரின் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், தொடர்ந்து மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழைக் காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவான 100 அடியில் 98 அடி வரை நிரம்பியது. இதனால், பாதுகாப்பு கருதி அணை நேற்று திறக்கப்பட்டது. அணையில் இருந்து சுமார் 8,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து, பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் சிறுமுகை, ஒடந்துரை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், நெல்லித்துரை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மேட்டுப்பாளையம் சென்ற கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், வெள்ளபெருக்கு காரணமாக வருவாய்த்துறை எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆற்றுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஓடந்துரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், இரவு முழுவதும் தண்ணீரின் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், தொடர்ந்து மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்குமாறும் அறிவுறுத்தினார்.