ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: 48 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர்: 48 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது பரம்பிக்குளம் - ஆழியாறு (பி.ஏ.பி) திட்டம். இத்திட்டத்தின் மூலம் பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சோலையாறு, உப்பாறு, மேல் நீராறு, கீழ் நீராறு, தூணக்கடவு மற்றும் பெருவாரிப் பள்ளம் ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டன. ஆனால், இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்டும் திட்டம் மட்டும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. ஆட்சியாளர்கள் கடந்த 35 ஆண்டுகளாக இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிவிட்டதால், நேற்று திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் எதிர்காலம் பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில், கட்சி சார்பற்ற விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் காங்கேயம் சீரணி அரங்கில், திருப்பூர் கட்சி சார்பற்ற விவசாய சங்கம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கேயம் வட்டார தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஏர்முனை இளைஞர் அணி மாநில செயல் தலைவர் வெற்றி, கள் ஒருங்கிணைப்பாளர் நல்லாசாமி, மாநில தலைவர் பொன்னுசாமி, துணைத்தலைவர் சண்முகம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், விவசாயிகள் சமூக மீட்பு இயக்கம் கோவிந்தாசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 



”இத்திட்டத்தை நிறைவேற்றாததால், தென்னை விவசாயத்துக்கு முறையாகத் தண்ணீர் கிடைக்காமல், கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் வளர்க்கப்பட்ட லட்சக்கணக்கான தென்னை மரங்களில் சுமார் 50% மரங்கள் முற்றிலுமாக காய்ந்துபோய்விட்டன. இனி மீதமுள்ள மரங்களையாவது காப்பாற்றி, இப்பகுதி விவசாயத்தைப் பாதுகாக்கவும், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே 2 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும்," என்கின்றனர் விவசாயிகள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...