சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு

கோவை: தென்மேற்கு பருவமழையின் காரணமாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரத் தொடங்கியதையடுத்து, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கோவை: தென்மேற்கு பருவமழையின் காரணமாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரத் தொடங்கியதையடுத்து, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.



கோவை அருகே உள்ள சின்னவேடம்பட்டி ஏரியானது பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. சுமார், 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும். கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம், மாங்கரை, கணுவாய் பகுதியில் பெய்யும் மழையானது, ராஜவாய்க்கல் வழியாக 9 கி.மீ., தூரம் பயணம் செய்து சின்னவேடம்பட்டி ஏரியை சென்றடைகிறது. அதன் பின், அம்மன் கோவில் வழியாக பயணம் செய்து சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆச்சான் குளம் சென்றடைகிறது.



இந்த சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரவழைக்க ராஜவாய்க்கலை தூர்வார வேண்டும், ஏரியினையும் சீர்செய்ய வேண்டும் என்பதற்காக கடந்தாண்டு சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக தற்போது பெய்த மழை காரணமாக நீர்வரத்து வரத் தொடங்கியது.



இதனை கவுரவிக்கும் விதமாக, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஏரிக்கு நீர்வரத்து வர உதவிய அனைவருக்கும் நன்றி பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல சமூக ஆர்வலர்கள், ஏரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...