சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு

கோவை: தென்மேற்கு பருவமழையின் காரணமாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரத் தொடங்கியதையடுத்து, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கோவை: தென்மேற்கு பருவமழையின் காரணமாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரத் தொடங்கியதையடுத்து, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.



கோவை அருகே உள்ள சின்னவேடம்பட்டி ஏரியானது பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. சுமார், 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும். கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம், மாங்கரை, கணுவாய் பகுதியில் பெய்யும் மழையானது, ராஜவாய்க்கல் வழியாக 9 கி.மீ., தூரம் பயணம் செய்து சின்னவேடம்பட்டி ஏரியை சென்றடைகிறது. அதன் பின், அம்மன் கோவில் வழியாக பயணம் செய்து சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆச்சான் குளம் சென்றடைகிறது.



இந்த சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரவழைக்க ராஜவாய்க்கலை தூர்வார வேண்டும், ஏரியினையும் சீர்செய்ய வேண்டும் என்பதற்காக கடந்தாண்டு சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக தற்போது பெய்த மழை காரணமாக நீர்வரத்து வரத் தொடங்கியது.



இதனை கவுரவிக்கும் விதமாக, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஏரிக்கு நீர்வரத்து வர உதவிய அனைவருக்கும் நன்றி பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல சமூக ஆர்வலர்கள், ஏரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...