கோவை: பாரம்பரியத்துக்கு திரும்புவதோடு, உடல் ஆரோக்கியத்தை பாதிக்காத இயற்கை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு சந்தை', வடகோவை மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்று வருகின்றது.
கோவை: பாரம்பரியத்துக்கு திரும்புவதோடு, உடல் ஆரோக்கியத்தை பாதிக்காத இயற்கை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு சந்தை', வடகோவை மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்று வருகின்றது.

காலை 10 மணியிலிருந்தே கோவையைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், விவசாயிகளும் இந்த சந்தையை பார்வையிட்டு, செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட விளைபொருட்களை ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர். இந்த சந்தை மாலை 5 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயல்வாகை என்ற தன்னார்வ அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவையில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து வருகின்றது. மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் சந்தை நடைபெறுகிறது.

இதில், இயற்கை வழி விவசாய விளைபொருட்கள், தேன், சிறு தானிய தின்பண்டங்கள், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், மதிப்புக் கூட்டிய உணவுப் பொருட்கள், மர விளையாட்டு சாமான்கள் என, இயற்கை சார்ந்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் அகிலா கூறுகையில், "பிளாஸ்டிக் பொருட்களை தடுக்கும் பொருட்டு, இங்கு பொருட்களை வாங்க வருபவர்கள் துணிப் பைகளை கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளோம். முற்றிலும் இயற்கை சார்ந்த சந்தையாக உள்ளது." என்றார்.
சந்தை குறித்து பனை பொருட்கள் விற்பனை செய்யும் விசுவநாதன் என்பவர் கூறுகையில், "இங்கு வரும் மக்களுக்கு இயற்கை சார்ந்த விவசாய பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது. பனையில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களான பைகள், கூடைகள், அழைப்பிதழ் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறேன். இதுவும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான ஒரு மாற்றாக அமைகிறது. இதனை மக்கள் வாங்கும் போது விவசாயிகளும் பயனடைவார்கள்." என்றனர்.

இந்த சந்தை மிகவும் பயனுள்ளதாகவும், அடுத்த தலைமுறையினருக்கு இந்த சந்தை இயற்கை விவசாயம் குறித்த புரிதலை உண்டாக்கும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

காலை 10 மணியிலிருந்தே கோவையைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், விவசாயிகளும் இந்த சந்தையை பார்வையிட்டு, செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட விளைபொருட்களை ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர். இந்த சந்தை மாலை 5 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயல்வாகை என்ற தன்னார்வ அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவையில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து வருகின்றது. மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் சந்தை நடைபெறுகிறது.

இதில், இயற்கை வழி விவசாய விளைபொருட்கள், தேன், சிறு தானிய தின்பண்டங்கள், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், மதிப்புக் கூட்டிய உணவுப் பொருட்கள், மர விளையாட்டு சாமான்கள் என, இயற்கை சார்ந்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் அகிலா கூறுகையில், "பிளாஸ்டிக் பொருட்களை தடுக்கும் பொருட்டு, இங்கு பொருட்களை வாங்க வருபவர்கள் துணிப் பைகளை கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளோம். முற்றிலும் இயற்கை சார்ந்த சந்தையாக உள்ளது." என்றார்.
சந்தை குறித்து பனை பொருட்கள் விற்பனை செய்யும் விசுவநாதன் என்பவர் கூறுகையில், "இங்கு வரும் மக்களுக்கு இயற்கை சார்ந்த விவசாய பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது. பனையில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களான பைகள், கூடைகள், அழைப்பிதழ் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறேன். இதுவும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான ஒரு மாற்றாக அமைகிறது. இதனை மக்கள் வாங்கும் போது விவசாயிகளும் பயனடைவார்கள்." என்றனர்.

இந்த சந்தை மிகவும் பயனுள்ளதாகவும், அடுத்த தலைமுறையினருக்கு இந்த சந்தை இயற்கை விவசாயம் குறித்த புரிதலை உண்டாக்கும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.