நீலகிரியில் கடந்த ஆண்டைவிட கூடுதலாக 30 சதவீதம் மழைப் பதிவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டை விட 30 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் தெரிவித்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டை விட 30 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் தெரிவித்தார்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மழை பெய்யும். இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையால் மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் அணைகளான முக்குறுத்தி, அவலாஞ்சி, எமரால்டு, போத்தி, கெத்தை, அப்பர் பவானி, காமராஜர் அணை, பைக்காரா அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்படும்.

இதேபோல, குடிநீர் ஆதாரங்களான மார்லி மந்து, டைகர் ஹில், பார்சன்ஸ்வேலி, கீழ் மற்றும் மேல் கோடப்மந்து, கீழ் மற்றும் தொட்ட பெட்டா உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படும். இதனால், நகரில் குடிநீர் விநியோகம் சீராக இருக்கும். இந்நிலையில், இந்தாண்டு தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் கடந்த சில நாட்களாக உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ளது. மழையின் காரணமாக கடுங்குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் தற்போது அதிகரித்துக் காணப்படும் நிலையில், இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தின் ஒராண்டுக்கான சராசரி மழையளவு 1.325 மி.மீ., மழையாகும். இதில், தென்மேற்கு பருவ மழை மட்டும் 630 மி.மீ., மழைப் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவ மழை 345 மி.மீ., மற்றவை 350 மி.மீ., மழையின் அளவாக உள்ளது.



கடந்த 2014-ம் ஆண்டு 1,392.5 மி.மீ., மழையும், 2015-ம் ஆண்டு 1,400.3 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இதன்மூலம், இரு ஆண்டுகளிலும் தலா 5 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. இதேபோல, கடந்த 2016-ம் ஆண்டு 613.8 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. இது 53 சதவீதம் குறைவாகும். கடந்தாண்டு 1,324.9 மி.மீ., மழை பெய்துள்ளது. இது சராசரி மழைப் பதிவாகும். இந்தாண்டு தற்போது வரை 400 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதன்மூலம், 30 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது, என்றார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...