நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மசினகுடி சரகம் அவரல்லா பில்சோனா வனப்பகுதியில் இருவர் சந்தேகிக்கும் வகையில் சுற்றித் திரிந்து வந்தனர். இதனைக் கண்ட அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேட்டைத் தடுப்பு காவலர்கள், உடனடியாக மசினகுடி சரகர் என். மாரியப்பனுக்கு தகவல் கொடுத்தனர். அவரின் உத்தரவின் பேரில் இருவரையும் பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் உடும்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சன் (48) மற்றும் ரமேஷ் (38) என்பது தெரியவந்தது.

சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய குற்றத்துக்காக இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பிடிபட்ட உடும்பு கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது.

மசினகுடி சரகம் அவரல்லா பில்சோனா வனப்பகுதியில் இருவர் சந்தேகிக்கும் வகையில் சுற்றித் திரிந்து வந்தனர். இதனைக் கண்ட அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேட்டைத் தடுப்பு காவலர்கள், உடனடியாக மசினகுடி சரகர் என். மாரியப்பனுக்கு தகவல் கொடுத்தனர். அவரின் உத்தரவின் பேரில் இருவரையும் பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் உடும்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சன் (48) மற்றும் ரமேஷ் (38) என்பது தெரியவந்தது.

சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய குற்றத்துக்காக இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பிடிபட்ட உடும்பு கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது.
