அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள்: அரசின் அறிவிப்பிற்கு வரவேற்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் நேற்று பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் நூலகங்களைப் பராமரிப்பதற்கென தற்போது தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசின் இந்த அறிவிப்பு குறித்து கோவையில் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் நடத்தி வரும் கனகராஜ் கூறியதாவது :- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதனால், கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை எளிய மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு முன் தமிழக அரசு சார்பாக சென்னையில் சிறப்பு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டு ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. இங்கு பயிற்சி பெற்ற பலர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். குறிப்பாக, கடந்த 8 வருடங்களில் அதிக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை உருவாக்கிய சாதனை தமிழகத்திற்கு உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்குவதால், தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்," என்றார்.

குறிப்பாக, வழக்கமான பள்ளி ஆசிரியர்களை வைத்து தேர்வு எழுதுவோருக்கு பயிற்சி கொடுக்காமல், ஐ.ஏ.எஸ்., தேர்வில் அனுபவமிக்கவர்களை கொண்டு பயிற்சியளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐ.ஏ.எஸ்., பயிற்சியாளர் கனகராஜ் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...