கோவையில் இளம் பத்திரிக்கையாளர்களுக்கான 'வாசிப்பை நேசிப்போம்' நிகழ்ச்சி

கோவை: இளம் பத்திரிக்கையாளர்களுக்கான வாசிப்பு தன்மையை ஊக்கப்படுத்தும் வகையில், 'வாசிப்பை நேசிப்போம்' என்ற நிகழ்ச்சி கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.



கோவை: இளம் பத்திரிக்கையாளர்களுக்கான வாசிப்பு தன்மையை ஊக்கப்படுத்தும் வகையில், 'வாசிப்பை நேசிப்போம்' என்ற நிகழ்ச்சி கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.

இளம் பத்திரிக்கையாளர்கள் வாசிப்பு தன்மையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை பிரஸ் கிளப், அறிவுக்கேணி மற்றும் வாங்க படிக்கலாம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இன்றைய காலகட்டத்தில் புத்தகத்தின் தேவையையும், அதன் வலிமையையும் இளம் பத்திரிகையாளர்கள் உணரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது.

இதில் அறிமுக உரையாகப் பேசிய எழுத்தாளர் சி.ஆர். இளங்கோவன் கூறும்போது:- நான் கல்லூரி காலம் முடிந்த பின்பு கோவையின் வரலாறு என்று ஒரு புத்தகத்தை எழுதினேன். அதன் தொடர்ச்சியாக வாசகர்கள் இந்தப் புத்தகத்தில் இருந்த கோவையின் தகவல்களை என்னிடம் ஆழமாகக் கேட்டனர் இதனால், இன்னும் தகவல்களை தேடி அலைந்தேன். பின்னர் தொடர்ச்சியாக புத்தகங்கள் எழுதினேன், என்றார்.

தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். கே. விஜயகார்த்திகேயன் பேசுகையில்," டாக்டர், ஐ.ஏ.எஸ். அதிகாரி, எழுத்தாளர் என்பதை எல்லாம் விட வாசிப்பதின் மூலம் சமூகத்தில் முன்னேறிய மாணவனாக இருப்பதை நான் பெருமை கொள்கிறேன். சமூக விழிப்புணர்வுக்கு சாவியாக இருப்பது புத்தகம்தான். ஆகவே, வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தகவல் என்பது ஒரு ஆயுதமாக உள்ளது," இவ்வாறு கூறினார்.



தேசிய விருது பெற்ற பத்திரிக்கையாளர் சே. சேவியர் செல்வகுமார் கூறியதாவது :- இளம் பத்திரிகையாளர்கள் புத்தகங்களை அதிகமாக வாசிக்க வேண்டும். நாங்கள் இளம் வயதில் படித்த புத்தகங்கள் தான் இன்று எங்களை வளமைப்படுத்தியுள்ளது. துல்லியமாக செய்திகளை பதிவு செய்ய வாசிப்பு அவசியம். "சிறுவாணி புத்தகம்" கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும், என்றார். இந்த நிகழ்ச்சியில் இளம் பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...